BCCIயின் ஆலோசனை குழு - Jan 17
தற்போது, இந்தியாவின் உள்நாட்டு 20 ஓவர் கிரிக்கெட் தொடரான, Syed Mushtaq Ali தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்திய சர்வதேச கிரிக்கெட் வாரியமானது, இந்த ஆண்டின் ரஞ்சி தொடரை யும், நடத்தவேண்டும் என்கிற முடிவில் ஆணித்தரமாக உள்ளார்கள். அதனைக்குறித்தும், பிற்காலத்தில் நடைபெறவிருக்கும் பல கிரிக்கெட் தொடர்கள் குறித்தும் விவாதிக்க, வருகின்ற 17ன் தேதியன்று, ஓர் ஆலோசனை குழு நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இந்தியாவின் தலைசிறந்த உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான, ரஞ்சி தொடர், கொரோனா நோயின் காரணத்தினால், தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயின் காரணத்தினால் தான், இவ்வாண்டு நடைபெறவிருந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரும் மற்றும் துலீப் கோப்பை தொடரும், நடைபெறாமல் வெளியானது. சையத் முஷ்டாக் அலி தொடரை முதலில் நடத்தவேண்டும், என்பதன் முக்கிய காரணம், இதனை மிக விரைவில் நடத்தி முடித்துவிடலாம் என்பதும், IPL தொடருக்காக ஒவ்வொரு அணிகள் தேர்வு செய்ய எதுவாக அமையும் என்பதற்காகவும் தான். ரஞ்சி தொடர் நடைபெறாமல், ஒரு ஆண்டும் இதுவரை இருந்ததில்லை. ஆதலால், ரஞ்சி தொடரை, வருகின்ற பிப்ரவரி மாதம், நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இதன், அத...