ரமேஷ் பொவார் தான் மும்பையின் புதிய பயிற்சியாளர் !

சில நாட்களுக்கு முன்பு தான், மும்பை மாநில கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான அமித் பாக்னிஸ் அவர்கள் , தன் பதவியை ராஜினாமா செய்கிறார். அவருக்கு அடுத்து யார் பயிற்சியாளர் என்கிற கேள்வி, அனைவரின் மனதில் இருந்தது. அதற்கான பதில் தான், தற்போது ரமேஷ் பொவார் அவர்களை, பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது. இவ்வாண்டில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரில் , மும்பை அணி மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. 5 போட்டிகளில், ஒன்றை மற்றும் வென்று மீதி நான்கில் தோல்வியை தழுவியது மும்பை அணி. வலுவான அணியாக திகழ்ந்தாலும், மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அமித் பாக்னிஸ் அவர்கள், தனது பதவியை ராஜினாமா செய்தார். தான் இழந்த மரியாதையும் நம்பிக்கையையும், மீண்டும் கைப்பிடிக்க வேண்டும். அதற்காக தற்போது, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான, ரமேஷ் பொவார் அவர்களை புதிய பயிற்சியாளராக நியமித்துள்ளார்கள். மும்பையில் பிறந்து வளர்ந்த ரமேஷ் பொவார் அவர்கள், 31 ஒரு நாள் போட்டிகளும், 2 டெஸ்ட் போட்டிகளும் விளையாடியுள்ளார். அதில், 34 விக்கெட்டுகள் ஒரு நாள் கிரிக்கெட்டிலும், 6 விக்கெட்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்...