இறுதி வரை சென்ற உலகக்கோப்பை போட்டி - 2019

அனைவருக்கும் தெரிந்திருக்கும், மேற்கு இந்திய தீவுகள் அணி மற்றும் ஆஸ்திரேலியா அணி, எவ்வாறு எதிரணியின் மீது தங்களின் வேகப்பந்து வீச்சாளர்களால் அழுத்தம் ஏற்படுத்துவர் என. இரு அணிகளும் தங்களின் துணிச்சலான ஆட்டம் மற்றும் தங்களின் வேகப்பந்து வீச்சிற்காகவே பெயர் வாங்கிய அணிகள். ஒரு புறம் பாகிஸ்தான் அணியை 105 ரன்களுக்கு பார்சல் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி. மறுபுறம் 209 ரன்களுக்கு ஆப்கானிஸ்தான் அணியை மண்டையில் கொட்டி அனுப்பிய ஆஸ்திரேலியா அணி. இவர்கள் மோதிக்கொண்டாள் போட்டி சுவாரஸ்யம் இல்லாமல் அமைந்து விடுமா..........??



ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில், சரியாக ஓராண்டிற்கு முன், இவ்விறுகள் அணிகள் எதிர்கொண்டது. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றவாறு அமைந்த மைதானம் மற்றும் பிட்ச் இது. அதன் வாயிலாக மேற்கு இந்திய தீவுகள் அணியை சேர்ந்த காட்ரல், ஓஷேன் தாமஸ் மற்றும் ஆண்ட்ரே ரசல் மூவருமே ஆஸ்திரேலியா அணியின் தொக்க வீரர்களை திணறடித்தனர். ஷார்ட் பந்துகள், குட் லெங்த்தில் வீசப்பட்ட ஸ்விங் பந்துகள் மற்றும் நான்காம் ஸ்டம்பின் லைனில் வீசப்பட்ட பந்துகள், இவை அனைத்தும் தடுமாற்றத்தை வரி வழங்கியது. ஆஸ்திரேலியா அணியின் திணறி, தங்களின் விக்கெட்டை ஏற்றவாறு கீப்பரிடம் மற்றும் உல் வட்டத்தில் நின்றிருந்த ஃபீல்டர்களிடம் கேட்ச் கொடுத்து விட்டு சென்றார்கள். அதன் காரணமாக 7.4 ஓவர்களில் 38/4 என அடிவாங்கிய நிலையில் இருந்தது. மேற்கு இந்திய தீவுகள் ராஜா தந்திரிகளாக திகழ்ந்தார்கள். அங்கிருந்து ஸ்டீவ் ஸ்மித், படகோட்டியாக நின்று, நிதானத்துடன் பந்துகளை எதிர்கொண்டார். தன மனதில் இருந்த ஒரே குறிக்கோள், அணியை நல்ல ஸ்கோருக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று தான். 79 ரன்கள் இருக்கும் போது, ஹோல்டர் வீசிய பந்தில் இரையானார் ஸ்டாய்னிஸ். இங்கிருந்து, அலெக்ஸ் கேரி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் நேரம் எடுத்துக்கொண்டார்கள். இருவரிடமும் நன்கு புரிதல் இருந்ததால், சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். அதுமட்டுமின்றி, மேற்கு இந்திய தீவுகள் அணி சிறிது அலட்சியமாய் விட்டதன் காரணத்தினால், ரன்கள் வர தொடங்கியது. குறிப்பாய் அலெக்ஸ் கேரி, முதல் 26 பந்துகளில் வெறும் 3 ரன்களை மட்டுமே குவிந்திருந்த நிலையில், நேரம் எடுத்தார். அடுத்த 28 பந்துகளில் 42 ரன்கள் அடித்தார். நேரம் எடுத்துக்கொண்டாலும், தெளிவுடன் புரிந்துகொண்டதால், அழகாக ரன்களை சேர்த்து வேகத்திற்கேற்ப மாற்ற இயன்றது. ஆனால் 45 ரங்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். அப்போது ஸ்கோர் 148/6. அப்போதும், நிலை திரும்ப வில்லை. இங்கிருந்தும் சிறிது அழுத்தம் ஏற்படுத்தினால் 190 ரன்களுக்குள் ஆஸ்திரேலியா அணியை பார்சல் செய்திருக்க முடிந்திருக்கும். ஆனால், அணைத்து வித திட்டங்களிலும் எமனாக திகழ்ந்தவர் தான் நாதன் கோல்டெர்னையில். அங்கு மேற்கு இந்திய தீவுகள் செய்த தவற்றும் தான். சில இடங்களில், ஃபுள் டாஸ் பந்துகள் வீசப்பட்டதால் ரங்களின் வேகம் அதிகரித்தது. கோல்டெர்னைல் இறங்கிய முதற்பந்திலிருந்து அதிரடியாக ரன்களை சேர்க்க முடிவுடன் இருந்தார். ஸ்டீவ் ஸ்மித் மிகவும் அழகாக அரை சதத்தினை கடக்க, போட்டியின் சூடு அதிகரித்தது. தரையோரமாய் விளையாடினர் ஸ்டீவ் ஸ்மித். மறுபுறம் கோல்டெர்னைல் சிறிது வேகத்துடன் விளையாடினார். ஆனால் ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்கள் விழ, கோல்டெர்னைல் அரை சதம் கடந்தார். அதன் பின், சதத்தை வேட்டுவர் என நினைத்திருக்கும் நேரத்தில் 92 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் 49 ஓவர்கள் முடிவில், 288 ரங்களுக்கு அணைத்து விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா அணி. தொடக்கத்தில், விக்கெட்டுகளின் வீழ்ச்சி இல்லாவிட்டால் 350 ரன்கள் நிச்சயம் அடித்திருப்பார்கள். அத்தருணத்தில், மேற்கு இந்திய தீவுகள் அணி அலட்சியப்படுத்தாமல் பந்துவீச்சில் கவனம் இருந்திருந்தால், 170 ரன்களுக்குள் சுருண்டுருப்பர் ஆஸ்திரேலியா அணி.

தொடக்கத்தில் 2 விக்கெட்டுகள் இழந்தது மேற்கு இந்திய தீவுகள் அணி. ஸ்டார்க் மிகவும் தந்திரத்துடன் பந்துவீசினார். ஆனால், ஆஸ்திரேலியா நை 4 விக்கெட்டுகளை கைவிட்டதன் போன்று விடாமல், ஷாய் ஹோப் மிகவும் பொறுமையாக, தரையோரமாய் விளையாடினார். ஷார்ட் பந்துகள் வீசப்பட்டாலும், அதனை கீழே விளையாடினார். ஸ்கோர் நன்றாக உயர்ந்தது. இடையில், நிக்கோலஸ் பூரான் நன்கு விரைவுடன் விளையாட, ஸ்கோரின் வேகம் உயர்த்தப்பட்டது. ஆனால், 40 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர், ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும், மறுபுறம் ஷாய் ஹோப் நன்கு ரன்களை சேர்த்தார். 35ம் ஓவரில் 190/4 என ஸ்கோர் இருந்த நிலையில் தனது விக்கெட்டை 68 ரங்களுக்கு இழந்தார். ஆனால், அவர் மேற்கொண்டு செய்ய வேண்டிய வேலையை நன்கு செய்தார். இங்கிருந்து அடுத்த 99 ரன்கள், 15 ஓவர்கள் வெளியே இருந்த நிலையில் கைகளில் 5 விக்கட்டுகள் இருந்த வீதம் மேற்கு இந்திய தீவுகள் அணியின் கைகளில் தான் போட்டி இருந்தது. அதிலும், ஹோல்டர் அரை சாதத்தை கடந்திருந்தார். ஆனால், மேற்கு இந்திய தீவுகள் அணியிடம் உள்ள ஓர் இன்னல், அவசரம். விரைவாக போட்டியை முடிக்க வேண்டும் என்கிற எண்ணம், தவறான எண்ணம். ஆனால், 252/6 என்கிற நிலையில் மீதம் உள்ள 24 பந்துகளில் 37 ரன்கள் தேவை என்று இருந்தது. அன்று, ஸ்டார்க் நன்கு பந்துவீசி வருகின்றார். நினைத்திருந்தால் கைகளில் 4 விக்கெட்டுகள் உள்ளது. சிறிது பொறுமையுடன், மறுபுறத்தில் பந்து வீசும் பந்துவீச்சாளரை தாக்கியிருக்கலாம். ஆனால், அவசரம் மற்றும் ஸ்டார்க்கின் தந்திரம், தேவையான நேரத்தில் ப்ரத்வெய்ட் மற்றும் ஹோல்டரின் விக்கெட்டுகளை கைப்பற்றியது. இறுதியில் 273/9 என 50 ஓவர்களில் முடிவில் முடித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி. 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா அணி. அவசரம் இல்லாமல் இருந்திருந்தால் போட்டியை கைப்பற்றியிருக்கலாம்.

ஆட்ட நாயகன் விருதை வென்றது நாதன் கோல்டெர்னைல் - தனது 60 பந்துகள் அடித்த முக்கிய 92 ரன்கள்.







   

Comments

Popular posts from this blog

A Decade and Future

Happy Birthday Jonathan Trott

Coffee King and Debt