கிரிக்கெட் செய்திகள்

இவ்வாண்டின், ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19ம் தேதியன்று துவக்கம் பெற்று, நவம்பர் 10ம் தேதியன்று நிறைவு பெரும், என்கிற செய்தியை நாம் அறிவோம். அதற்கு, இணையாக பல செய்திகள் வெளிவந்தது. இவ்வாண்டின் ஐபிஎல் தொடரில், தென் ஆஃப்ரிக்கா நாட்டை சேர்ந்த வீரர்கள் பங்குபெறுவது என்பது சந்தேகத்துக்குரிய செய்தி தான், என பேச்சுக்கள் பரவியது. அதனோடு இணைந்து, ஐபிஎல் நடைபெறும் இடையிலேயே, ஆஸ்திரேலியா அணிக்கும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கும், இடையே நடைபெறவுள்ள 20 ஓவர் தொடரின் காரணத்தினால், இவ்விருவணிகளின் வீரர்களும் பங்கேற்பது என்பது சந்தேகம் தான், என வதந்திகள் வெளிவர, தற்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது.

அவ்வறிப்பில், இவ்வாண்டின், அக்டோபர் மாதத்தில் நடக்கவிருந்த ஆஸ்திரேலியா மேற்கு இந்திய தீவுகள் தொடரை நாங்கள் தள்ளிவைக்கின்றோம். இத்தொடரை, நாங்கள் பின் வரும் ஆண்டுகளுக்கு அட்டவணை செய்கிறோம். இத்தீர்வை, இரு நாட்டின் கிரிக்கெட் வாரியங்களும் இணைந்து, வெளியிடப்பட்ட தீர்வே ஆகும்.

இதற்கு முன், ஆஸ்திரேலியா அணிக்கும் ஜிம்பாப்வே அணிக்கும், இடையே துவங்க விருந்த தொடரை ஏற்கனவே தள்ளிவைத்துள்ளார்கள். கூடுதலாய், ஆஸ்திரேலியாவுக்கும் பங்களாதேஷுக்கும், இடையே நடக்கவிருந்த ஒரு டெஸ்ட் போட்டியையும் அவர்கள் தள்ளிவைக்க, இப்போது இத்தொடரையும் தள்ளிவைத்துள்ளார்கள்.

என் தள்ளிவைக்க திட்டமிட்டுள்ளார்கள் ? என  கேள்விகளை எழுப்ப, அதற்கு அவர்கள் அளித்த ஒரே பதில் " இவ்வாண்டில் நடக்கவிருந்த 20 ஓவர் உலககோப்பைக்கு தயார் ஆகு போட்டியாக, இத்தொடரை நாங்கள் அட்டவணை செய்தோம். அவ்வாறு, கூறப்படும், 20 ஓவர் உலகக்கோப்பை தொடரையே, பின் வரும் ஆண்டுகளுக்கு தள்ளிவைத்து ICC. இதற்கு மேல், இத்தொடரையும் நாங்கள் பின் வரும் ஆண்டுகளுக்கு, தள்ளிவைக்கின்றோம்" என கூறினர்.

ஆதலால், ஐபிஎல் தொடரில், ஆஸ்திரேலியா அணியின் வீரர்களும் மேற்கு இந்திய தீவுகள் அணியின் வீரர்களும், பங்கேற்பதற்கான வாய்ப்புகள், இப்போது மேலும் அதிகரித்தது. நான் ஐபிஎல் தொடர் ஒன்றை மட்டும் வைத்து கூறுவதன் காரணம், அனைத்து செயல்களும் ஒன்ருக்கொன்று இணைந்ததே.

"Everything is connected ரா ஏலேய்"     

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood